எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக்
குறிப்பு மற்றும் அவரது படைப்புகள்...
1920-ஆம் ஆண்டு கும்பகோணத்தில்
சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர் எம்.வி.வி. இவருடைய பெற்றோர் வீரைய்யர் – சீதை அம்மாள். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத்
தத்தெடுத்துக்கொண்டனர். தொடக்கத்தில் பட்டுச்சரிகை வணிகம் செய்துகொண்டு
மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதினார். 16ஆவது வயதில் முதன்முதலில் இவர் எழுதிய
“சிட்டுக் குருவி” எனும் சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியானது. “விக்ரஹவிநாசன் ”
எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.
1941 – 1946 காலகட்டத்தில் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும்
எழுதியுள்ளார். 1965 – 1970 காலகட்டத்தில்
தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் “தேனீ ” என்ற இலக்கிய இதழைத் தொடங்கி
நடத்தினார். தேனீ இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின்
சிறுகதைகளை வெளியி்ட்டிருக்கிறார்.
நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில்
தேசபக்தர்களைப் பற்றிய பள்ளி மாணவர்களுக்கான அறுபது சிறுநூல்களை பழனியப்பா
பிரதர்ஸ் நிறுவனத்திற்காக எழுதியுள்ளார்.
இவருடைய மனைவி ருக்மணி அம்மாள். நான்கு மகன்கள் மூன்று மகள்கள். 2000ஆம்
ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவர் காலமானார்.
புதினங்கள்
நித்திய கன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ
சிறுகதைத் தொகுதிகள்
மாளிகை வாசம்
உறங்காத கண்கள்
மோகினி
குயிலி
இனி புதிதாய்
நானும் உன்னோடு
அகலிகை முதலிய அழகிகள்
எம். வி. வெங்கட்ராம் கதைகள்
முத்துக்கள் பத்து
பனிமுடி மீது கண்ணகி.
வேள்வித் தீ நாவல் குறித்த என்னுடைய ஆய்வுரையை விரைவில் இவ்வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்...
தோழமையுடன்
யாழினி முனுசாமி
No comments:
Post a Comment