Saturday, July 28, 2012


எழுத்தாளர்  எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் அவரது படைப்புகள்...

       1920-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர்  எம்.வி.வி. இவருடைய பெற்றோர் வீரைய்யர் – சீதை அம்மாள். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். தொடக்கத்தில் பட்டுச்சரிகை வணிகம் செய்துகொண்டு மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதினார். 16ஆவது வயதில் முதன்முதலில் இவர் எழுதிய “சிட்டுக் குருவி” எனும் சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியானது. “விக்ரஹவிநாசன் ” எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.  1941 – 1946 காலகட்டத்தில் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். 1965 – 1970 காலகட்டத்தில்  தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.  ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் “தேனீ ” என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார்.   தேனீ இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை வெளியி்ட்டிருக்கிறார். 

     நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப் பற்றிய பள்ளி மாணவர்களுக்கான அறுபது சிறுநூல்களை பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்காக எழுதியுள்ளார்.  இவருடைய மனைவி ருக்மணி அம்மாள். நான்கு மகன்கள் மூன்று மகள்கள். 2000ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவர் காலமானார்.


புதினங்கள்

நித்திய கன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ

சிறுகதைத் தொகுதிகள்

மாளிகை வாசம்
உறங்காத கண்கள்
மோகினி
குயிலி
இனி புதிதாய்
நானும் உன்னோடு
அகலிகை முதலிய அழகிகள்
எம். வி. வெங்கட்ராம் கதைகள்
முத்துக்கள் பத்து
பனிமுடி மீது கண்ணகி.

வேள்வித் தீ நாவல் குறித்த என்னுடைய ஆய்வுரையை விரைவில் இவ்வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்...

தோழமையுடன் 
யாழினி முனுசாமி

கரிகால் சோழனின் பேரன் தமிழ் ஈழம் எனும் முகநூல் நண்பர் நல்ல நல்ல செய்திகளை வெளியிடுகிறார்...அவர் இன்று வெளியிட்ட செய்தி கீழே...


கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்க சாதி வெறியர்களால் விதிக்க பட்ட வரிகளை பாருங்கள் இதை விட கேவலம் எது

திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது.
 ·  ·  · 38 minutes ago ·